வியாழன், 1 ஜூலை, 2010

கற்பிணங்கள்


விழியோர கண்ணீரில்
வழிகிறது நம் கனவுகள்
விடைப் பெற்றிட துடிக்குது
கூட்டிலெஞ்சிய உயிர்



முற்வேலிக்குள்ளே முடங்கிக்கிடக்குது
எங்கள் வானம்

முகாரியில் வீசுது
எமைத் தீண்டும் காற்று

முகாமுக்குள்ளேயே முடிந்திடுமோ
எமது வாழ்வு….?

கருத்துகள் இல்லை: