ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

தலைநிமிர்வாய் தமிழினமே





விரிந்த இவ்வுயர் மனித சாகரத்தில்
      விதைத்தெழுந்தவனே தமிழன் !
கரிசல் பூமியிலும் வைரங்களை யறுத்தவன் !
கருணையை விதைத்து அன்பை பெருக்கியவன் !
புரியாத புதிராய் பூமிக்குள் பூத்தவன் !
புரிகின்ற மனிதருக்கே இடமில்லா பூமியில்
சரித்திரங்களும் பல்நற் காவியங்களும்
சரியாத மொழிகொண்டே படைத்தவன் !

இருப்பில்லா இலக்கியங்களுள் எந்தமிழனின்
இலக்கியங்களிலுண்டாம் நற்கருத்து !
திருக்குறளென்னும் அறநூல் படைத்து
திருந்தா மனிதரையும் திருத்தியதுண்டு
கருப்பொருள் குலைந்த கதையை யாய்ந்து
கம்ப ராமாயணமும் பாடியதுண்டு !
மருவற்ற இயேசு காவியமும் எந்தமிழனின்
மிளிர்கின்ற இலக்கியச் சிதறல்களாம்

பின்னிரவில் துணைவிடுத்து வயலில்
பாருக்குழைக்க பாதம் பதிப்பான்
தன்னலங் கருதாவுழைப்பில் தரணியை
தலைநிமிர்த்தியவனும் எந்தமிழனே !
முன்னிலவுப் பனியில் தன் பத்தினியோடு
முத்தங்களை மொத்தமாய் குத்தகையெடுத்து
புன்னகைப் பூக்களாய் புதுக்கவிதை
பிரசவிக்கும் பாவலனும் எந்தமிழனே !

எண்ணங்களை எழுத்துள் நுழைத்து
அழகு தமிழில் கவியுரை எழுதி
விண்ணோங்கும் புகழ் சேர்த்துப்புவியில்
விந்தைகள் பலநாட்டி கவியில்
மண்ணுலகெங்கும் தமிழின் பெயர் பதிக்க
மானிடர் யாவும் தமிழுரைக்க
கண்களில் மிதக்கும் கனவு...! என்றோ
கற்பனையல்ல நிசமே உரைக்கும் பார் !




2 கருத்துகள்:

vijithu சொன்னது…

நல்லா இருக்கு, வாழ்த்துக்க்ள்.....

தோழி சொன்னது…

தமிழனின் பெருமைகள் அருமை