ஞாயிறு, 18 ஜனவரி, 2009

காத்திருக்குமா தென்றல்…?

மரணத்தின் தூர இடைவெளிகளில்
நிதமும் சஞ்சரிப்பவர்கள் நாம்…!
எப்போது ரசிக்கப் போகிறோம்
காற்றின் சலசலப்பை…?

செவ்வாய், 13 ஜனவரி, 2009

விதைகள்

அழிந்து வரும்
அழிக்கப்பட்டு வரும்
தமிழினத்தின் விதைகள் நாம்.
ஒவ்வொரு விதைகளுக்குள்ளும்
ஒளிந்து கிடக்கும்
விருட்சங்கள் !

விதைப்பதற்குதான்
விதைவதற்குதான்
எமக்கென்று இடமில்லை…