skip to main |
skip to sidebar
பற்றி எரிகிறது அவனுடல்
எத்தனை கோடி எண்ணங்கள்
எத்தனை கோடி ஆசைகள்
அத்தனையும் எரிகிறது அவனோடு
தீயின் வெப்பம் தீண்டவில்லை
அவன் இதய வெப்பம் தீண்டுகிறது
தீபக்கொழுந்தின் குழுமை
அவன் பேனை முனையில் வடிகிறது
யாகம் நடத்திப் பார்கிறது
யாசகம் கேட்டு நிற்கிறது
அவனிதயம் தனித்தே நிற்கிறது
துணையை இழந்து தவிக்கிறது
தீயின் வயதை தெரிந்திடவே
உடலை தீயிட்டு பார்கிறது
அவன் உயிரும் மெல்ல பிரிந்திடவே
தீயின் வயதும் தெரிகிறது
தீக்கு இன்னும் வயதாகவில்லை.
எனது சொந்த படைப்புக்களுக்கான அடையாளம்... நீண்ட கால தேடல்களில் இலக்குகள் தெரியாமல் தேடி அலைந்தவனின் இளைப்பாறுமிடம்…!
சனி, 26 மார்ச், 2011
ஞாயிறு, 20 மார்ச், 2011
நெருப்புக் கரங்கள்
எத்தனை கோடி எண்ணங்கள்
எத்தனை கோடி ஆசைகள்
அத்தனையும் எரிகிறது அவனோடு
தீயின் வெப்பம் தீண்டவில்லை
அவன் இதய வெப்பம் தீண்டுகிறது
தீபக்கொழுந்தின் குழுமை
அவன் பேனை முனையில் வடிகிறது
யாகம் நடத்திப் பார்கிறது
யாசகம் கேட்டு நிற்கிறது
அவனிதயம் தனித்தே நிற்கிறது
துணையை இழந்து தவிக்கிறது
தீயின் வயதை தெரிந்திடவே
உடலை தீயிட்டு பார்கிறது
அவன் உயிரும் மெல்ல பிரிந்திடவே
தீயின் வயதும் தெரிகிறது
தீக்கு இன்னும் வயதாகவில்லை.
Rank
என்னைப் பற்றி

- சசிகுமார் பாலகிருஸ்ணன்
- பிறந்தோம்... வாழ்ந்தோம்... இறந்தோம்...! என்ற ஒற்றை வரிக்குள் அடங்கவிரும்பாதவன்.
இதுவரை எழுதியது
பிரபலமான இடுகைகள்
-
ஆயிரம் கவிதைகளுக்கான முதல் வரி உன் பெயர் முதல் வரி எழுதும் போதே நிகழ்கிறது என் மரணம் உன் தீண்டலில் உயிர்த்தேன் விரல்களின்றி...
-
வண்ணங்களை குழைத்து இறைவன் வரைந்த ஆகர்ஷ சித்திரம் ; மாலை ! எண்ணங்கள் ஏழ்நூறாய் எழுத்துக்குள் அர்த்தமுடன் புதைகின்ற பொன்வ...
-
விரிந்த இவ்வுயர் மனித சாகரத்தில் விதைத்தெழுந்தவனே தமிழன் ! கரிசல் பூமியிலும் வைரங்களை யறுத்தவன் ! கருணையை விதைத்து அன்பை பெருக்...
-
மாற்றங்கள் வேண்டும் அகராதியில் எட்டப்பன் என்ற சொல்லை எடுத்துவிடுங்கள் கருணா என்ற சொல்லிருக்கு காட்டிக்கொடுப்பவன் என்ற பொருளுக்கு
-
கனவெல்லாம் நீயே... என் நினைவெல்லாம் நீயே... என் உயிர் சுட்டுப்போனாய் காதல் தீயே...! முதலோடு சிலநாள் முடிவோட...
-
எல்லாமே இரகசியமாய் நடக்கின்ற அந்தி வேளை இரவின் கருப்பு மனதோடு சாயமேற்ற கால்கள் மட்டும் பாதை தேடி களைத்தே யோயும் ...
-
பற்றி எரிகிறது அவனுடல் எத்தனை கோடி எண்ணங்கள் எத்தனை கோடி ஆசைகள் அத்தனையும் எரிகிறது அவனோடு தீயின் வெப்பம் தீண்டவில்லை அவன் இதய வெப்ப...
-
( இக்கவிதை 2001.06.13 ல் தமிழ்மொழித் தினப்போட்டிக்காக எழுதியது. ) சன்னலோரத்தில் தவமியற்றும் சிலையவளை நோக்கிய தோழி புன்னகைப்பூக்களை சிதற...
-
கண்கள் கூச உறக்கம் தொலைத்தோம் பொழுது புலர்ந்தாயிற்றாம் மீண்டும் தொடங்குகிறோம் எங்கு செல்கிறோம்…? எதற்காய் செல்கிறோம்…? விடைகளற்ற வினாக்களோடு...
-
அழிய வேண்டிய அழிக்க வேண்டிய நரகாசுரர்கள் உயிருடன் உலவுகையில் கொண்டாடுகிறோம் தீபாவளி.